15ஆம் திகதி மீண்டும் எரிபொருள் விலையில் மாற்றம்? அமைச்சரின் விசேட அறிவிப்பு

இந்த மாதம் 15ம் திகதி மீண்டும் எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாது என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்தது.

இதற்கமைய, டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டது.

இதன்படி, தற்போது 415 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீற்றர் டீசல் 430 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 340 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 365 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *