ஆளுநர் பதவிகளை பகிர்ந்து கொண்ட மொட்டு – ஐ.தே.க.!

மாகாண ஆளுநர்களை நியமிப்பது சம்பந்தமாக பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் 9 ஆளுநர் பதவிகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 5 பதவிகளும், ஐக்கிய தேசியக்கட்சிக்கு நான்கு பதவிகளும்  வழங்கப்படும் வகையில் ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த யோசனைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விருப்பம் தெரிவிக்கவில்லை என்ற போதிலும் இறுதியில் இணக்கப்பாடு ஒன்றுக்கு வந்துள்ளனர். 

மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *