பெரும்போக செய்கை பெரும் பாதிப்பு! கவலையில் விவசாயிகள்

திருகோணமலை, தம்பலகமம் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தற்பொழுது பெரும் போக வேளாண்மை செய்கை விதைப்பு நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன.

பெரும்போகத்துக்கு தருவதாக விவசாய அமைச்சர் கூறியது போன்று ரொம்பஸ் பசளை கிடைக்கவில்லை, DSP பசளை கிடைக்கவில்லை பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றோம்.

ஒரு ஹெக்டேயருக்கு 157kg கிலோ அமைச்சர் தருவதாக கூறி இப்பொழுது ஒரு ஏக்கருக்கு 44 கிலோ மட்டும் தருகிறார்கள், இது எங்களுக்கு போதாது.

சென்ற சிறுபோகத்திலும் யூரியா பசளை உரிய நேரத்தில் கிடைக்கவில்லை, 100 நாட்களுக்குப் பிறகு கிடைத்தது, இதனால் மிகவும் பாதிக்கப்பட்டோம்.

இப்பொழுது பெரும் போகத்திலும் இதே நிலை ஏற்படுமோ என்ற சந்தேகம், டீசல் விலை அதிகரிப்பு டீசல் தட்டுப்பாடு உழவு இயந்திரத்துக்கான உணவு கூலி அதிகரிப்பு, கூலி வேலை செய்வோரின் கூலி போதாமை போன்ற பல பிரச்சினைகளில் பெரும்போக செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *