கண்டி இரஜவெல்ல இந்து தேசியக்கல்லூரியின் 113 வது பரிசளிப்பு விழா

கண்டி இரஜவெல்ல இந்து தேசியக் கல்லூரியின் 113 வது பரிசளிப்பு விழா மத்திய மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் திருமதி கோகிலேஸ்வரியின் தலைமையில் நடைபெற்ற விழாவில் பாடசாலை மட்டத்திலும் , மாவட்ட மற்றும் மாகாண மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் சாதித்த மாணவர்களுக்கு பரிசல்களும் அக்கல்லூரியில் கல்வி பயின்று பல துறைகளில் சாதித்த முன்னாள் மாணவர்களுக்கும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் அதிதிகளாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடு அமைப்பு அமைச்சின் பிரஜாசக்தி பணிப்பாளர் பாரத் அருள்சாமி, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் மதியுகராஜா, பரிட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர், என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *