மாணவர்களுக்கான காப்புறுதி தொகை குறைப்பு?

பாடசாலை மாணவர்களுக்கான “சுரக்ஷா” சுகாதார காப்புறுதி அமைப்பில், மாணவர்களின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் மரணத்திற்கான சுகாதார காப்புறுதித் தொகை 200,000 ரூபாவில் இருந்து 75,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற கட்டாய சரத்தை உள்ளடக்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கை கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

பெற்றோர் இருவரும் இறந்தால், இரு தடவைகளில் தனித்தனியாகத் தொகை வழங்கப்படும் என அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க மாகாண செயலாளர்கள், கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு விடுத்துள்ள புதிய சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் படி “எப்போதும் பாதுகாக்க வேண்டும் – தேசத்தின் குழந்தைகள்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த காப்புறுதி முறை நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *