இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் விளையாட்டுத் துறை அமைச்சர்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் நீர்ப்பாசன, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் திரு.ரொஷான் ரணசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று இடம்பெற்றது.

அந்த கலந்துரையாடலில், இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள வீரர்கள் விளையாடும் எட்டு விளையாட்டுகளுக்கான சேவைகளை வழங்கவும், அந்த விளையாட்டுகளின் மேம்பாட்டிற்கு தேவையான ஆதரவை வழங்கவும் இந்திய உயர்ஸ்தானிகர் ஒப்புக்கொண்டார்.  அவற்றில் வில்வித்தை, டென்னிஸ், கபடி, மல்யுத்தம் போன்றவை அடங்கும்.  மேலும், யாழ்ப்பாணப் பகுதியில் விளையாட்டு வளாகம் ஒன்றை அமைக்கவும் முன்மொழியப்பட்டது.

இந்திய உயர்ஸ்தானிகர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மிகக் குறுகிய தூரமே இருப்பதால், இந்தியாவின் சென்னையை மையமாகக் கொண்டு தற்போதைய ஐபிஎல் போட்டிகளை யாழ்ப்பாணத்தில் நடத்த முடியும்.

இந்தியாவில் தற்போது சென்னையில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் உள்ளது, அதன் ஆதரவைப் பெற்று, டயகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு வளாகத்தில் பல்கலைக்கழகம் ஒன்று நிர்மாணிக்கப்படுவது குறித்த உண்மைகளை ஆராய்ந்து அறிக்கை தருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

 நுவரெலியா பிரதேசத்தை மையமாகக் கொண்டு உயரிய விளையாட்டு நிலையமொன்றை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இது தவிர இலங்கையின் விவசாயத்திற்கு உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கவும் இணக்கம் காணப்பட்டது.

 மகாவலி வலயங்களில் சூரிய சக்தி பூங்கா திட்டத்தை நிர்மாணிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், நீர்ப்பாசன விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் திரு. ரொஷான் ரணசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு. கோபால் பாக்லே, விளையாட்டு அமைச்சின் செயலாளர் கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா, தேசிய விளையாட்டு சபையின் தலைவர் திரு.அர்ஜுன ரணதுங்க, அதன் செயலாளர் திருமதி சுஜானி போகொல்லாகம, விளையாட்டுத்துறை அமைச்சரின் ஆலோசகர் திரு.சுதத் சந்திரசேகர மற்றும் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *