மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் 33வது கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்த நிகழ்வு இன்றையதினம் யாழிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்றிருந்ததுடன் கார்த்திகை மாவீரர்களின் அர்ப்பணிப்புக்கள்இதியாகங்களை நினைவு கூர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் உறுப்பினர்கள்,இளைஞர் அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.