மூவின மக்களும் ஒரு கொடியின் கீழ் ஒன்று சேராத வரைக்கும் எமது நாடு உருப்பட போவதில்லை- சந்திரசேகரன் கவலை!

யாழில், இன்று 33 ஆவது கார்த்திகை வீரர்கள் ஞாபகர்த்த நிகழ்வு மக்கள் விடுதலை முன்னணியினரால் யாழ் அலுவகத்த்தில் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்றியிருந்தது.

அந், நிகழ்வில் யாழ்.மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் இந்நிகழ்வு தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் தெரிவித்ததாவது :

கார்த்திகை வீரர்களின் அர்ப்பணிப்புகள்,தியாகங்கள் ஆகியவற்றினால் தான் மக்கள் விடுதலை முன்னணி இன்று தேசிய மக்கள் சக்தியாக நாடு தழுவிய ரீதியாக மிக பிரமாண்டமான இயக்கமாக வாழ்வதற்கு காரணமாகும்.

யாழ்ப்பாணத்தில் இருக்கும் சாகாக்களுக்கு,தோழர்களுக்கு மக்கள் விடுதலை முன்னணியின் கலாசாரத்தினை புரிந்துகொள்வது மிகக்குறைவு .எமக்குரிய கடப்பாடு இந்நிகழ்வுகளை நாங்கள் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை இருக்கிறது.இதன் நிமித்தமாக இன்று இந்நிகழ்வினை செய்வதற்கு முக்கிய காரணமாகும். அந்தவகையில் மக்கள் விடுதலை முன்னணிக்கு இந்நிகழ்வு முக்கியமானதாகும்.

இந்நாட்டில் தமிழ்,சிங்கள,முஸ்லீம் என்ற மூவின மக்களும் ஒரு கொடியின் கீழ் ஒன்று சேராத வரைக்கும் எமது நாடு உருப்பட போவதில்லை என்று எங்களுக்கு திடமான நம்பிக்கை இருக்கிறது.அந்தவகையில் தேசிய ஒற்றுமையினை கட்டியெழுப்புகின்ற நடவடிக்கைளை முன்னெடுக்கின்ற நபர்களாக நாங்கள் செயற்படுகிறோம்.அந்தவகையில் இந்த சந்தர்ப்பம் மிக முக்கியமானது.என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *