யாழில் முக்கிய அமைச்சரின் அலுவலகத்திற்கே இந்த நிலையா?

நீண்ட காலமாக மின் கட்டணம் செலுத்தப்படாமையினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் யாழ்  ஸ்ரான்லி வீதியிலுள்ள சிறீதர் தியேட்டர் கட்டடத்தில் இயங்கி வரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைமைக் காரியாலயம் இருளில் மூழ்கியுள்ளதாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக தகவல்களை வெளியிட்ட பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கை மின்சார சபை ஊழியர் ஒருவர் 2014 ஆண்டுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணம் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்த நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கத்தில் மிக முக்கியமான சிரேஷ்ட அமைச்சராக இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது அதிகாரம்  அரசியல் செல்வாக்கு ஆகியவற்றை இதுவரை பயன்படுத்தாது இருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக குறித்த மின்சார சபை ஊழியர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் எவ்வித கருத்துக்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *