இரத்னபுரி,நவ 13
இரத்னபுரி ஹிதெல்லன பிரதேசத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் ஹிதெல்லன பிரதேசத்தில் பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அவரை வீட்டில் சந்திக்கச் சென்ற போது, குறித்த பெண்ணின் கணவர் அவரை தாக்கி மரத்தில் கட்டிவைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞனை வைத்தியசாலையில் அனுமதிக்க இரத்தினபுரி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்போது அவர் உயிரிழந்ததாக பொலிஸார். தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய 37 வயதுடைய சந்தேக நபர் இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.