மக்கள் இப்போது ஜே.வி.பி இன் பக்கம் – கட்சியின் இணைப்பாளர் தெரிவிப்பு

மக்கள் இப்போது எமது கட்சியை நோக்கி  படையெடுக்கின்றனர் என ஜே.வி.பி இன் வடமாகாண இணைப்பாளர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 மறைந்த எமது ரோகண விஜயவீர அன்று கூறியா விடயங்கள் இன்று நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.எம்மை அழித்தாலும் எம் குரல் ஓயாது என்று கூறியிருந்தார்.இன்று அதிகாரம் உள்ள அரசால் மக்கள் கசக்கிப் பிழியப்பட்டு,மிகுந்த துன்பத்தில் இருக்கின்றனர்.

இந்தத் தருணத்திலும் மக்கள் ஜெ.வி.பி ஐ நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.அதன் அடிப்படையில் மக்களின் வாழ்வை கட்டியெழுப்புவதற்கு நாம் திடசங்கற்பம் பூண்கின்றோம்.எங்களுடைய நாடு இப்படி போக வேண்டிய அவசியமே இல்லை.

எங்கள் நாட்டில் அவ்வளவு வளங்கள் உள்ளன.இதனை அரசாங்கத்தில் உள்ளவர்கள் சுறண்டி தாம் நன்றாக வாழ்கின்றனரே தவிர,நாட்டை வங்குரோத்து அடையச் செய்துள்ளனர்.பொருளாதாரக் கொள்கை இன்மையே இதற்கு காரணம்.இதற்காக குரல் கொடுத்தவர் தான் எமது  ரோகண விஜயவீர,அவர் இதற்காகத்தான் அன்று அழிக்கப்பட்டார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *