பதுளை,நவ 13
உலக உணவு தினத்தை முன்னிட்டு பதுளை நகரில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
‘பட்டினி, மந்தபோசனை என்பன திட்டமிட்ட குற்றம்’ என்ற தொனிப்பொருளில் பதுளை பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மலையக மக்களிடத்தில் காணப்படும் மந்தபோசனம் மற்றும் காணி உரிமை, மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்போம் என்ற சுலோகங்களை ஏந்தி மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.