பன்னிரண்டாவது (12வது) 2022/23 ற்கான பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழாவில், தற்காப்பு சேவைகள் கரப்பந்தாட்டப் போட்டி 2022 நவம்பர் 09, 10 மற்றும் 11 ஆகிய தினங்களில் மினுவாங்கொடையில் உள்ள ‘விமான நிலைய விளையாட்டு வளாகத்தில்’ நடைபெற்றது.
இலங்கை கடற்படையினரால் நடாத்தப்பட்ட இந்த போட்டியில் கடற்படை ஆடவர் கரப்பந்தாட்ட அணி இலங்கை விமானப்படை அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் இறுதிப் போட்டியில் இராணுவ அணியை 35 – 28 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து பன்னிரண்டாவது (12வது) டிஃபென்ஸ் சர்வீசஸ் கேம்ஸ் – 2022/23 ஆண்களுக்கான கரப்பந்தாட்ட சாம்பியன்ஷிப்பை வென்றதுடன், பன்னிரண்டாவது (12வது) பாதுகாப்பு சேவைகள் போட்டியில் இலங்கை கடற்படை வென்ற முதல் தங்கப் பதக்கமாகவும் இது அமைந்திருந்தது.
இறுதிப் போட்டியின் போது கடற்படை மற்றும் விளையாட்டுப் பணிப்பாளர் கொமடோர் ரொஷான் அத்துகோரல பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்திருந்தார்.
இதன்படி, சிறந்த ஸ்டிரைக்கருக்கான கிண்ணத்தை உடற் பயிற்சியாளர் பிரசாத் டி சில்வாவும், சிறந்த வலை காப்பாளருக்கான கிண்ணத்தை சஞ்சீவ டி சில்வாவும், சிறந்த வீரருக்கான கோப்பையை நவி பிரதீப் விஜேந்திராவும் பெற்றுக்கொண்டனர்.
மேலும், முப்படையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் விளையாட்டு வீரர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது…