2024ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடர் இலங்கையில்: இரசிகர்கள் கொண்டாட்டம்!

2024ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரை இலங்கை நடத்தும் என சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) உறுதி செய்தது.

அதேவேளை, அடுத்த தொடரை எதிர்வரும் 2026ஆம் ஆண்டு சிம்பாப்வே மற்றும் நமீபியா கூட்டாக இணைந்து நடத்தும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு பெண்கள் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் தொடர்களை நடத்துபவர்களை ஐசிசி உறுதி செய்தது.

மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் தொடரின் 2025 பதிப்பை நடத்தும் அதே வேளையில், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகியவை 2027ஆம் ஆண்டு பதிப்பை இணைந்து நடத்துவார்கள்.

மார்ட்டின் ஸ்னெடன் தலைமையிலான சபை துணைக் குழுவின் மேற்பார்வையில் போட்டி ஏல முறை மூலம் தொடரை நடத்தும் நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *