
யாழ்.அளவெட்டி நரியிட்டான் பகுதியில் தெல்லிப்பழை பொலிஸாரினால் ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதன்போது குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 45 மற்றும் 47 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்ட நிலையில், சந்தேக நபர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது குறித்த இருவருக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.