"ஆணுறை வேண்டாம்" அடம் பிடித்த தனுஷ்க குணதிலக்க – அவுஸ்ரேலிய ஊடகத்தின் பகீர் தகவல்

அனுமதியின்றி உடலுறவு கொண்டதாக நான்கு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி தற்போது அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, இரண்டாவது பிணை முயற்சியை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தியின்படி, இலங்கை சர்வதேச கிரிக்கெட் வீரர் டிசம்பரில் நியூ சவுத் வேல்ஸ் (NSW) உச்ச நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வார்.

இதன் போது  விண்ணப்பதாரர் சமூகத்திற்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஆபத்தை ஏற்படுத்தவில்லை என்பது நிரூபிக்கப்பட்டால் பிணை கிடைக்கலாம்.

31 வயதான தனுஷ்க குணதிலக்க நவம்பர் 6 ஆம் திகதி  அதிகாலையில் சசெக்ஸ் தெருவில் உள்ள ஹையாட் ரீஜென்சியில் இலங்கை அணி இங்கிலாந்திடம்   தோல்வி அடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார். அவர் இல்லாமல்இலங்கை அணி நாட்டை வந்தடைந்தது.

அனுமதியின்றி உடலுறவில் ஈடுபட்டதாக குணதிலகா மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நவம்பர் 2 ஆம் தேதி சிட்னியில் 29 வயது பெண் ஒருவருக்கு ,மீண்டும் மீண்டும் மூச்சுத்திணறல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த நிலையில்  “ஆணுறை இல்லாமல் உடலுறவில் ஈடுபட சம்மதிக்கவில்லை” அல்லது மூச்சுத் திணறலை உள்ளடக்கிய உடலுறவில் புகார்தாரர் தெளிவாக இருந்ததாக  சிட்னி மார்னிங் ஹெரால்ட் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *