சம்பளத்துக்கு பதிலாக ஹெரோயின் பக்கட்டுகளை கொடுத்த இலங்கை முதலாளி – அதிர்ச்சியில் பொலிஸார்

ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற சம்பளத்திற்கு பதிலாக ஹெரோயின் பொதிகளை வழங்கிய வர்த்தகர் ஒருவரை நவகமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட வர்த்தகர் நவகமுவ பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் என பொலிஸார் கூறுகின்றனர்.

குறித்த வர்த்தகரிடம் ஆறு பேர், தோட்ட வேலை செய்துள்ள நிலையில், தொழிலாளர்கள் போதைக்கு அடிமையானதால்,அவர்களுக்கு காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் ஒரு பக்கட் போதைப்பொருகள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த  வர்த்தகரிடம் பொலிஸார் விசாரணை நடத்தியபோது, பணம் கொடுத்தால் மறுநாள் வேலைக்கு வரமாட்டார்கள் என்பதால் ஹெராயின் பக்கட்டுக்களை கொடுத்ததாக தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *