<!–
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே இன்று அதிகாலை 3.42 மணியளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 4.1 ரிக்டர் ஆக பதிவானது. 120 கி.மீ. தொலைவுக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் கடந்த வாரம் 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் கடந்த 9ம் தேதி நேபாளத்தை மையமாக கொண்டு 6.3 ரிக்டர் ஆக பதிவானது. 2-வது நிலநடுக்கம் நேபாளத்தில் கடந்த 12-ந்தேதி 5.4 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது பஞ்சாப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.