முல்லைத்தீவில் நன்னீர் மீன் குஞ்சுகள் உற்பத்தி கேணி திறப்பு விழா! (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குணராஜா சற்குணராஜாவின் அகவை தினத்தை முன்னிட்டு, முன்னாள் போராளி ஒருவரின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக நன்னீர் மீன் குஞ்சுகள் உற்பத்தி கேணி திறப்பு விழா இன்று இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வானது முல்லைத்தீவு – இந்துபுரம் பகுதியில் இன்று நண்பகல் 12:00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நன்னீர் மீன் குஞ்சுகள் உற்பத்தி கேணி அமைப்பு திட்டமானது, கனடா வாழ் குணராஜா உதயராஜா நெறிப்படுத்தலில், குணராஜா குடும்பத்தினரின் (கனடா) சுமார் 4 இலட்சம் நிதி அனுசரணையுடன் நிறுவப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச மக்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *