கொழும்பில் இன்று நடைபெற்ற போராட்டத்தின் போது ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பெண் செயற்பாட்டாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சுதந்திர சதுக்கத்தில் இருந்து கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம் வரை ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியதுடன், கொழும்பில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களில் இருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எஞ்சியிருந்த எதிர்ப்பாளர்கள் கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு முன்பாக புதிய போராட்டத்தை ஆரம்பித்தனர்.