
2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டு உரையை , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது பாராளுமன்றில் சமர்ப்பித்து நிகழ்த்தி வருகின்றார்.
ஜனாதிபதியின் பாதீட்டு உரை மீதான விவாதம் நாளை (15) முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.
பின்னர் குழுநிலை விவாதம் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 8ஆம் திகதி வரை நடத்தப்படும்.
இது தொடர்பான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 8ஆம் திகதி இடம்பெறவுள்ளது.