
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் ஆரம்ப உரையை தற்போது ஆற்றிவருகின்றார்.
இந்நிலையில் 420 அரச நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் அரசாங்கத்தினால் பராமரிக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று (நவம்பர் 14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அவற்றுள் 52 பிரதான அரச நிறுவனங்கள் நட்டத்தைச் சந்தித்து வருவதாகவும் அவற்றின் வருடாந்த நட்டம் 86 பில்லியன் ரூபா எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிறுவனங்கள் மற்றும் கட்டமைப்புகளை அடுத்த சில தினங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.