யாழில் 40 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது

இந்தியாவில் இருந்து படகு ஒன்றில் யாழ். குருநகர் கடற்கரை பகுதிக்கு கடத்தி வரப்பட்ட 40 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த கஞ்சாவை கடத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞனையும், மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *