யாழில் பெண்களிடம் சேட்டை விட்ட 13 பேரை பொலிஸார் மறைந்திருந்து நோட்டமிட்டு வலைவீசி கைது செய்துள்ளனர்.!

யாழ்ப்பாணம் – பருத்துதுறை நகர் பகுதியில் பொலிஸாரின் தீவிர சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்துதுறை நகரப் பகுதிகளில் பெண்களுடன் தொடர்ச்சியாக சேட்டையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இன்று திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது 13 பேர் கைது செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

பருத்தித்துறை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரியந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் 13 பேரையும் கைது செய்து எச்சரித்து விடுவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *