இவ்வருடத்தை விட அடுத்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளத்துக்காக செலவிடும் தொகை குறைவு

கொழும்பு,நவ 14

இந்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக 420 பில்லியன் ரூபா செலவிடப்பட்ட போதிலும், அடுத்த வருடம் அது 380 பில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப அரசு ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *