ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் வெற்றி!

ஆண்களுக்கான ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் குழுநிலைப் போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் வெற்றிபெற்றுள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ரெட் பிரிவில் இடம்பெற்றுள்ள செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் மற்றும் கிரேக்கத்தின் ஸ்டெபினோஸ் சிட்ஸிபாஸ் ஆகியோர் மோதினர்.

இப்போட்டியில், நோவக் ஜோகோவிச், 6-4, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்றார்.

ஆண்கள் பிரிவில் முன்னணி டென்னிஸ் வீரர்களுக்கிடையில் நடைபெறும் ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடர், இத்தாலியின் டுரின்- பாலா அல்பிடூரில் உள்ள உட்புற கடின தரையில் நடைபெற்று வருகின்றது.

எட்டு வீரர்கள் பங்கேற்கும் இத்தொடரில், கிறீன் மற்றும் ரெட் என இரு குழுக்கள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *