நடமாடும் மதுசாலையாக மாறிய யாழ். ரயில் சேவை

பொது இடங்களில் மதுபானம் அருந்தக்கூடாது என்று கூறப்படுகிறது. எனினும் குடிபோதையில் உல்லாசமாக இருப்பவர்கள் யாழ்ப்பாணம் செல்லும் வார இறுதி தொடருந்தை நடமாடும் மதுசாலையாக மாற்றுகின்றனர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கான தொடருந்து பயணம் தற்போது பிரபலமாகியுள்ளது. கடந்த வார இறுதியில் முதல் வகுப்பு பெட்டி நிரம்பி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பெரும்பாலான பயணிகள் சில மோசமாக நடந்து கொண்டுள்ளனர்.

கித்தார், டிரம்ஸ் மற்றும் பிற இசைக்கருவிகளுடன் குழுவாக ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

காவலர்களோ, காவல்துறை அதிகாரிகளோ இல்லாதநிலையில், மது அருந்தி உல்லாசமாக இருந்தோரின் செயல்களை மற்ற பயணிகள் சிரித்துக்கொண்டே தாங்க வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *