பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யாத பட்ஜெட்- சஜித் ஆதங்கம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நேற்றையதினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எந்தவித பதிலும் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பாராளுமன்ற கட்டிடத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் நிவாரணங்களை எதிர்பார்த்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் அதற்கான திட்டங்கள் எதுவும் இந்த வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை. அந்த வகையில் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இதில் எவ்வித பதிலும் கிடையாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *