‘ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்’ வைரலாகும் இலங்கைப் பாடல்

தற்போது சமூக வலைத்தளத்தில் இலங்கை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ‘ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்’ எனும் பாடல் தற்போது உலகளவில் வைரலாகி வருகின்றது.
கணவனால், காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்களின் வலியை விவரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை விஜய் ஆண்டனியின் ‘நான்’ திரைப்படத்தில் ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ என்ற பாடலை எழுதி தமிழ் சினிமாவில் அறிமுகமான இலங்கைக் கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து விஸ்வாசம், அண்ணாத்த படங்களுக்கு அவர் எழுதிய புரோமோ பாடல்கள் உலகளவில் வைரலாகியது.

அத்துடன் ஜெயலலிதாவின் இரங்கல் பாடலையும் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் ‘ஐயோ சாமி நீ எனக்கு வேணாம், பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்’ என்ற அல்பம் பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார்.

தற்போது எல்லோரும் முணுமுணுக்கும் பாடலாக உலக ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டு ரசிக்கப்பட்டு வருகிறது இந்தப் பாடல்.

இந்தப் பாடலுக்கு இசையமைத்திருக்கிறார் இலங்கையின் தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் சனுக.

பாடலைப் பிரபல இலங்கை பாடகி வின்டி குணதிலக்க பாடியுள்ளார். இந்தக் குரல் வளம் ஏதோ எம்மை கட்டி போட வைக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *