
சுமார் 41 கிலோ கஞ்சாவை இந்தியாவிலிருந்து கடத்தி வந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் குருநகர் கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்தக் கைது இடம்பெற்றது.
குறித்த கஞ்சாப் பொதிகளை கடத்திவரப் பயன்படுத்தப்பட்ட படகும் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டது.
சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த கடற்படையினர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.