மக்களின் காணிகளை பறிக்க மாட்டேன் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று இடம்பெறவிருந்த கூட்டம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஊடகங்களுக்கு தெளிவு படுத்தியுள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்:

அரசாங்க காணிகள்  இங்கே பல உள்ளன. 1950 ஆம் ஆண்டு அளவில் பலருக்கு இங்கே காணிகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் ஒரு இலட்சம் பேர் வரையில் இந்த காணிகள் அன்று வழங்கப்பட்டது.

இந்த காணிகளை தற்போது எத்தனை பேர் பயன்படுத்துகின்றனர் என்று நான் முதலில் அறிய வேண்டும். அதன் பின்னர் அந்தக்  காணிகளுக்கு  பதிவுகளை வழங்க வேண்டும்.  பயன்படுத்தாத காணிகளை   ஏனையவர்களுக்கு  வழங்க வேண்டும்.

  மக்களுக்கு இந்த காணிகள்  அதிகளவில் வழங்கப்படும். 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் வன வள  திணைக்களத்திற்கு அதிக காணிகள்  வழங்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி  அறிவித்தலும் பிரசிரிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று நான்காயிரம் பேர் வரையில் தங்களுடைய காணிகள் இல்லையென்று கூறி இருக்கிறார்கள். அது பற்றியும் நாம் ஆராய உள்ளோம். காணிகளை நாம் எடுத்த  வாக்கில் சும்மா யாருக்கும் வழங்க முடியாது.

அரசாங்கத் திணைக்களங்கள்  பலவற்றுக்கும் காணிகள் தேவைப்படுகின்றன. இப்படியான விடயங்களை ஆராய்வதற்காகவே இன்றைய கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டது. காணி விடயங்கள் அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். அதனை நாம் சட்டரீதியாகவே  செய்கிறோம்.

காணிகளை பறித்துக் கொடுப்பது எனது வேலை அல்ல. அது பற்றி கதைப்பதற்காகவே இன்றைய கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *