யாழில் சட்டத்தரணி சுகாஷ் மீது பொலிஸார் தாக்குதல் ? – ஆளுநர் அலுவலகம் முன்பாக பதற்றம் (படங்கள் இணைப்பு)

வடக்கில் காணப்படும் காணி தொடர்பான பிரச்சினைகள்,சுவீகரிப்புகள்,மற்றும் அரச திணைக்களங்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பில் ஆராய்தல் போன்றவற்றுக்காக ,ஆளுநர் அலுவலகத்தில் தற்போது கூட்டம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜ தலைமையில் ,ஆளுநர் அலுவலகத்தில் ,முப்படைகளுடன் இந்தக் கூட்டம் தற்போது நடைபெறுகிறது.

மக்களின் காணிகளை அபகரித்து ,படையினருக்கு வழங்குவதாக தெரிவித்து,இன்றைய தினம்  மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.கூட்டத்துக்கு வருகை தந்த முப்படைகளை உள்ளே நுழைய விடாமல் மக்கள் தடுத்தனர்.இதன் பொது பொலிஸார் போராட்டக் காரர்களுடன் இழுபறிப்பட்டனர்.இதன் போது பெண் ஒருவரின் ஆடை கிழிந்தமையால் குறித்த இடத்தில் குழப்பம் ஏற்பட்டது.

அத்துடன் இந்தக் கூட்டத்தில் என்ன நடைபெறுகிறது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்,அலுவலகத்துக்குள் எம்மை உள்ள நுழைய விட வேண்டும் என போராட்டத்தில் கலந்துகொண்ட சட்டத்தரணி சுகாஷ் உள்ளே செல்ல முற்பட்ட வேளை,அவரை பொலிஸார் இழுத்து தள்ளியதுடன்,அவரை சுற்றி வளைத்து அசைய விடாமல் பொலிஸார் தடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *