வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க நிபந்தனை முன்வைத்தார் வடிவேல் சுரேஷ்!

தோட்டத் தொழிலார்களுக்கான சம்பளம் தொடர்பாக வரவு செலவுத் திட்டத்தில் ஒரு வார்த்தை கூட இல்லை என வடிவேல் சுரேஷ் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

தமது மக்களுக்கு நீதி கிடைத்திருந்தால் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக இரு கைகளையும் உயர்த்தியிருப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆகவே எதிர்காலத்தில் தோட்டத் தொழிலார்களுக்கு நீதி வழங்குவது தொடர்பாக பரிசீலிக்குமாறு வடிவேல் சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *