ஹட்டன் தலவாக்கலை பிரதான பாதைகளில் நடக்கும் லீலைகள்!

ஹட்டன் தலவாக்கலை பிரதான பாதையில் கொட்டகல.பகுதியிலும் ஏனைய பகுதிகளில் உள்ள சுற்றுலா பயணிகள் பாரவையிட கூடிய இடங்களில் சில உள்ளூர் நபர்கள் நபர்கள் மிக அனாகரியமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக இப்பாதையின் ஊடாக பிரயாணம் செய்யும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக முச்சக்கர வண்டிகளில் பிரயாணம் செய்யும் ஒரு சிலர் சுற்றுலா பிரயாணிகள் பார்வையிட கூடிய இடங்களில் முச்சக்கர வண்டியை நிறுத்தி வைத்துவிட்டு வண்டிக்குள் சிலர் தவரான செயல்களில்(பெண்களுடன்) ஈடுபடுவதாக தெரிவிக்கின்றனர்.

  

 இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள்,உள்ளூர் சுற்றுலா பயணிகள் மற்றும் குடும்பங்களுடன் செல்வோர் இவ்வாரான செயல்களினால் முகம்சுளிக்க வேண்டிய நிலைக்கு ஆழாகியுள்ளனர்.

 இவ்வாரான செயல்களில் ஈடுபடுபவர்களை இப்பாதையின் ஊடாக செல்கின்ற பொலிஸ் அதிகாரிகளும் கண்டும் காணாதது போல செல்வதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றார்கள்

இவ்வாறான சுற்றுலா பிரயாணிகள் வந்து இடங்களில் இவ்வாரான குற்றச்செயல்களில் நபர்கள் சம்பந்தமாக பொலிஸார் கவணம் செலுத்தவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள்விடுக்கின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *