2023 வரவு -செலவுத் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு சலுகைகள் இல்லை: மத்தும பண்டார

கொழும்பு,நவ 15

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் வழங்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நாட்டின் பொருளாதார நிலை, பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு, வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதை உறுதி செய்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வரவு -செலவுத் திட்டத்தில் இலக்கு திட்டம் இல்லை என்றும் வெறும் ஆவணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்கு முன்னர் பொதுமக்கள் மீது வரிகள் விதிக்கப்பட்டதாகவும்,வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை.

வரவு -செலவுத் திட்டத்தில் விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் அல்லது அரசத் தொழிலாளர்கள் குறித்து பேசப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *