பெண்களின் சடலங்களை மோசமாக போட்டோ,வீடியோ எடுத்த நபர்

இந்தியாவின் கர்நாடகா மடிக்கேரி பகுதியிலுள்ள அரச வைத்தியாசாலை பிணவறையில் ஊழியராக கடமையாற்றும் ஒருவர் பெண் சடலங்களை நிர்வாணமாக போட்டோ எடுத்த சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.

வைத்தியாசாலையில் பணியாற்றும் கடகதாலு பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே  குறித்த சம்பவத்துடன்  தொடர்புடையவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்து நபர் தன்னுடன் பணிபுரியும் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நிலையில், அயலவர்கள்
சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் கைதான ஊழியர் பிணையில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் ஊழியரிடமிருந்து பறிமுதல் செய்த கைத்தொலைபேசியை ஆய்வு செய்த போது அதில் தான் வேலைப் பார்த்த பிணவறையில் பெண்களின் உடல்களை நிர்வாணமாகப் படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *