யாழில் காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம்,நவ 15

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் காணி சுவீகரிப்பு தொடர்பான கூட்டமொன்று இடம்பெற ஏற்பாடாகி இருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(15) வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் அக்கட்சியினர் பங்கேற்றனர்.

காணி சுவீகரிப்புகென பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி திணைக்கள பிரதிநிதிகள் ஆளுநரால் கூட்டமொன்றுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கூட்டத்தில் பங்கேற்க அதிகாரிகளுக்கு இடமளிக்க மாட்டோம் என தெரிவித்து முற்றுகை கவனயீர்ப்பு போராட்டம்  முன்னெடுக்கப்பட்டதால் கூட்டத்திற்கு வருகை தந்த அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டதுடன் கூட்டமானது இணையவழியில் நடத்தப்பட்டது.

தொடர்ச்சியாக போராட்டகாரர்கள் ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டவாறு இருந்த நிலையில் முப்படையினருக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவிருந்தது.

இந்நிலையில் பொலிஸாரினால் போராட்டகாரர்கள் அப்புறப்படுத்தப்பட்டு கூட்டம் இடம்பெறுவதாக தெரியவருகிறது. இதன்போது போராட்டகாரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *