எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்று கொள்ள 20,700 முச்சக்கரவண்டிகள் பதிவு

கொழும்பு,நவ 15

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்வதற்காக 20,700 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

5லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடு 10 லீற்றராக அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு முன்னதாக குறிப்பிட்டிருந்தது.

குறித்த முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகம் இம்மாதம் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *