நவாலியில் சூழகம் அமைப்பினால் மரநடுகை!

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் வேண்டுகோளுக்கிணங்க   யாழ் மானிப்பாய் நவாலி மகாவித்தியாலயத்திலும், அதன் முன்பாக அமைந்துள்ள அரசடி வீதியிலும் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர்  திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில்   நவாலி அரசடி வீதியை சேர்ந்த அமரர் பொன்னையா கந்தசாமி அவர்களின் இரண்டாவது ஆண்டு  நினைவாக  இன்றைய தினம் ( 14- 11 – 2022 )  30 மரக்கன்றுகள் நடுகைசெய்யப்பட்டன. 

திரு. சபாரத்தினம் கேதீஸ்வரன் ( பிரான்ஸ் ) அவர்களின் நிதியுதவியில் நடைபெற்று  மேற்படி மரநடுகை நிகழ்வில்  பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள்,  மாணவர்கள் ,  நவாலி விவசாய சம்மேளன பொருளாளர் செ.ராஜேந்திரம் ,  மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்களான ஜோன் ஜிப்ரிகோ , வன்னியசேகரம் , வாசன் மற்றும் யாழ் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் மற்றும் சூழகம் அமைப்பின் உறுப்பினர்களான ச.கேதீஸ்வரன் , க.குணாளன் , கனாதீபன் , தர்சன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்ததோடு  சூழகம் அமைப்பினரால் பாடசாலை மாணவர்களுக்கு மரக்கன்றுகளும் , வாசிப்பு புத்தகங்களும் வழங்கப்பட்டிருந்தன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *