கிளிநொச்சி பளை பிரதேச செயலகம் முன்னால் பேரூந்தில் மோதுண்ட கடுமையான காயங்களுடன் உயிருக்கு போராடிய கர்ப்பிணி பசுமாட்டினை இன்று (15) மாலை 3 மணியளவில் ,கால்நடை வைத்திய குழாம் காப்பாற்றியுள்ளது.
மேற்படி, விடயம் தொடர்பாக மருதங்கேணி கால்நடை வைத்திய அதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டதோடு விரைந்து செயற்பட்ட வைத்தியர் எஸ்.சுகிர்தன் தலைமையிலான குழுவினர் சத்திர சிகிச்சையினை மேற்கொண்டு கர்ப்பிணி பசுவினை காப்பாற்றியுள்ளனர், பின்னர் உரிமையாரிடம் பசுமாடனாது ஒப்படைக்கப்பட்டது.