கர்ப்பிணி பசுமாட்டின் உயிரை காப்பாற்றிய கால்நடை வைத்திய குழாம்-பளையில் சம்பவம்!

கிளிநொச்சி பளை பிரதேச செயலகம் முன்னால் பேரூந்தில் மோதுண்ட கடுமையான காயங்களுடன் உயிருக்கு போராடிய கர்ப்பிணி பசுமாட்டினை இன்று (15) மாலை 3 மணியளவில் ,கால்நடை வைத்திய குழாம் காப்பாற்றியுள்ளது.

மேற்படி, விடயம் தொடர்பாக மருதங்கேணி கால்நடை வைத்திய அதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டதோடு விரைந்து செயற்பட்ட வைத்தியர் எஸ்.சுகிர்தன் தலைமையிலான குழுவினர் சத்திர சிகிச்சையினை மேற்கொண்டு கர்ப்பிணி பசுவினை காப்பாற்றியுள்ளனர், பின்னர் உரிமையாரிடம் பசுமாடனாது ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *