வவுனியா புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 5 பேர் தப்பியோட்டம்

வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 5 பேர் தப்பியோடியுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (நவ.15) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு வழங்கப்பட்டு வாருகின்றது.

இந்தநிலையில் குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் நீதிமன்ற உத்தரவுக்கமைய தங்க வைக்கப்பட்டு புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்களில் 5 பேர் தப்பியோடியுள்ளனர்.

விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட போதே குறித்த 5 பேரும் தப்பியோடியுள்ளதாக தெரியவருகிறது.

தப்பியோடிய 5 பேரும் வடபகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

இதனையடுத்து குறித்த பகுதியில் புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து  தப்பியோடியவர்களை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *