தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
இலங்கை மக்களுக்கு கடந்த காலங்களில் தமிழக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் திட்டங்களுக்கு இதன்போது செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசாங்கத்தின் தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு இன்று (நவ.15) இடம்பெற்றுள்ளது