மத்திய மலைநாட்டில் நீர் வளம் இருந்தும் நீரின்றி அவதிப்படும் பாடசாலை!

மலையக மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கி கொண்டிருக்கும் நுவரெலியா வலய கல்வி காரியலத்தின் கீழ் இருக்கும் சென்கிலயர் தமிழ் மகா வித்தியாலயத்தில் கிட்டத்தட்ட பல வருடங்களாக குடி நீர் இன்றி மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு சிரமங்களை தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றார்கள் என்பது மிகவும் கவலைக்கிடமான விடயமாகும்.

 இப், பாடசாலையில் சுமார் 600க்கு மேட்ப்பட்ட மாணவர்கள் கல்வி பயிலுகிறார்கள் 25 க்கு மேட்ப்பட்ட ஆசிரியர்களும் தொழில் புரிகிறார்கள். ஆனால் இந்த பாடசாலையில் ஒவ்வொரு வருடமும் சாதாரண தரம் 5ம் ஆண்டு புலமை பரீட்சை போன்றவற்றில் சிறந்த பெறு பேருகளை பெற்று நுவரெலியா மாவட்டத்திலே, இப் பாடசாலை சிறந்து விளங்குகின்றது. 

ஆனால், மலயகத்தை அங்கம் வகிக்கும் மலையக தலைவர்களிடம் பலமுறை இவ் விடயத்தை கொண்டு சென்றும் கண்டு கொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் அபிவிருத்தி சங்கமும் தெரிவிக்கினறனர் .

 இவ், விடயத்தில் கூடிய விரைவில் நம்முடைய மாணவ செல்வங்களுக்கு சுத்தமான குடி நீரை பெற்று தர வேண்டிய பொறுப்பு சம்மந்தப்பட்டவர்களை அதிகாரிகள் கவணத்திற்க்கு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாராளுமன்ற கவணம் செலுத்த வேண்டும்.

இப், பாடசாலை யானது கொட்டக்கலை பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பாடசாலையாகும். எனவே, இப் பாடசாலை நீர் பிரச்சனை சம்பந்தமாக கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத்தின் கவணத்திற்க்கு கொண்டு வருகின்றனர். பாடசாலை அபிவிருத்திச் சங்கம், மற்றும் பாடசாலை மாணவர்கள் அங்கு கடமையில் புரியும் ஆசிரியர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *