தமிழ் மக்களுக்கு பெருமை சேர்ந்த தங்க மாணவிகள் – குவியும் பாராட்டுக்கள்

திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரி மாணவிகள் தேசிய இலக்கிய விழாவில் மூன்று போட்டிகளில்  பங்குபற்றி வெற்றியீட்டியுள்ளனர்.
 
செல்வி. அனா கிரேஸ் விமலன், செல்வி . அக்சா நிமங்ஷனி சுரேந்திரா ஆகிய மாணவிகள் 1ம் இடங்களைப் பெற்று, கல்லூரிக்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

அத்துடன்  கல்லூரியைச்   வழிநடத்திச் செல்லும் அதிபர் திருமதி. சுபா ஜோண் தேவதாசுக்கும் , மாணவிகளை நெறிப்படுத்திய ஆசிரியர்கள் திருமதி. அருள்லக்ஷ்மி சசிதரன், திருமதி. பிரவீனா தட்சாயனன் ஆகியோருக்கும் கல்லூரிச் சமூகம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

மேலும் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு  நாளை  நடைபெறவுள்ள தேசிய இலக்கிய விழாவில் கௌரவிப்பு இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *