
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் பாடசாலை ஒன்றில், நேற்று காலை ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்கு சென்று பார்த்தபோது இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் அதே பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன் புஷ்பந்தன் வயது இருபத்தி ஒன்று என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்துடன் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.