வீதியைவிட்டு ஓடைக்குள் பாய்ந்த வாகனம்; 11 பேர் மருத்துவமனையில்..!

மத்துகம – மீகஹதென்ன பகுதியில் வேன் ஒன்று ஓடைக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

கட்டுநாயக்கவில் இருந்து காலி நோக்கி பயணித்த வேன் ஒன்றே இன்று(16) காலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் மீகஹதென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக களுத்துறை நாகொட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவத்தில் காலி பிரதேசத்தை சேர்ந்தவர்களே இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *