
பளுதூக்கலில் சாதனை படைத்து வவுனியா மண்ணிற்கு பெருமை சேர்த்த வவுனியா பளுதூக்கல் கழகத்தை சேர்ந்த வீராங்கனைகளை பாராட்டும் விதமாக உதவி மாவட்ட செயலாளர் எம்.சபர்ஜா, மாவட்ட விளையாட்டு அலுவலர் தே.அமலன், பூப்பந்து பயிற்சியாளர் த.கமலன், விளையாட்டு அதிகாரி பா.பாசில் , டி.விந்துஜன் ஆகியோர்களால் இன்று (16) மாவட்ட செயலகத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டனர்.
இலங்கை பளுதூக்குதல் சம்மேளனத்தால் (Sri Lanka Weightlifting Federation) நவம்பர் மாதம் 10, 11 ஆகிய இரு நாட்களும் பொலனறுவையில் நடத்தப்பட்ட தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் – 2022 (National Weightlifting Championship – 2022) போட்டியில் வவுனியா பளுதூக்கல் கழகத்தை சேர்ந்த தி.கோசியா (youth) இரண்டாம் இடத்தையும், நி.சுஸ்மிதாகினி (senior) மூன்றாம் இடத்தையும், பா.செரோண்யா (senior) ஆகியோர் பதக்கங்களை பெற்றிருந்தனர்.
வவுனியா பளு தூக்கல் கழகத்தின் பயிற்றுவிப்பாளர் ஞா.ஜீவனின் நெறிப்படுத்தலில் இம் மாணவிகள் தயார் படுத்தப்பட்டு பளுதூக்கும் போட்டிகளில் பங்கு பற்றி பதக்கங்களை பெற்று வவுனியா மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.