கிளிநொச்சியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டி பயணம்!(படங்கள் இணைப்பு)

இளையோரின் எதிர்காலம் இன்றே அமைப்பின் ஏற்பாட்டில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டி பயணம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக ஆரம்பமான பயணம் A9 வீதி ஊடாக பயணித்து, இரத்தினபுரம், கணேசபுரம் பகுதி ஊடாக மாவட்ட செயலகம் வரை சென்று நிறைவடைந்தது.

கிளிநொச்சி நகர வட்டாரத்தை முன்னுரிமைப்படுத்தி ஆரம்பமான குறித்த பயணம், மாவட்டத்தில் காணப்படும் போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து இளம் சமூகம் விடுதலை பெறும் வகையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது, பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் குறித்த பயணம் தொடர்பில் விழிப்புணர்வினை பெற்றனர். இதன்போது, துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.

இப்பயணத்தில், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், யுவதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிறைவில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிறி மோகனிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *