இலங்கையில் அரசு பேரூந்துகள் செயலிழப்பு – அல்லல் படும் பயணிகள்

இலங்கை போக்குவரத்துச்  சபைக்கு சொந்தமான பேருந்துகள் திடீர் பணிபுறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.

  இ.போ.ச ஊழியர்களின் பொது சம்பளத்தை  நடைமுறைப்படுத்தல், மற்றும் ஊழியர்களின் அடக்கு முறைக்கு எதிராக எதிர்வரும் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு, கொழும்பு தலைமையகத்தில் முற்றுகை போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக இ.போ.ச பேருந்துகளில் பாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க தொழிற்சங்க போராட்டம் தொழிற்சங்க கூட்டமைப்பு உரிமை கோரியுள்ளது.

 போராட்டத்திற்கு அனைத்து இ.போ.ச ஊழியர்களும் அன்றைய தினம் கொழும்பு தலைமையக வளாகத்தில் ஒன்றிணையுமாறு அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *