துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட வர்த்தகர்

கண்டி,நவ 16

திகன பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர வர்த்தகரான மங்கள குணவர்தன இன்று (16) திகன நகரில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தின் மேல் மாடியில் உள்ள தனது அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவர் பல வர்த்தக நிறுவனங்களுக்கு சொந்தக்காரன் இருந்தும் தனக்கு சொந்தமானது அரச அனுமதியுடன் தனது பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தும் வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை, இது தொடர்பாக பல்லேகல பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *